காதலும் கருப்பு அங்கிகளும்

 

 

 

கருப்பு அங்கியணிந்த

சிலரிடையே உனக்கான நானும்

எனக்கான நீயும்…

 

நமக்கான நம் கண்மணிகள்

உன்னோடு ஓரிரு வாரங்களும்

என்னோடு ஓரிரு வாரங்களுமாம்…

 

நல்லது என்ற தொனியில்

சந்தோஷிக்கும் நம்

நலம் விரும்பிகளும் உறவுகளும்…

 

என்னை வலியவளாக்கிக்

கொண்டிருந்த நம் காதல் –  ஓரிரு

 நொடிகளில் வறியவளாக்கிய அவலம்…

 

என் இதயச் சிதறல்கள்

இன்னமும் உன் பேர் சொல்லியே

துடித்துக் கொண்டிருக்கின்றன…

 

நம்முடைய காதலும்,

காதல் நிமித்தமும்

ரத்தாகாமல் இருந்திருக்கலாம்…

 

ஒருவேளை புரிதலும்,

புரிதல் நிமித்தமும்

நமக்குள் வலுப்பட்டிருந்திருந்தால்…!

8 thoughts on “காதலும் கருப்பு அங்கிகளும்

  1. அருமை நுண்மதி …! இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என கேட்க வைக்கும் கவிதை … இனிமேல் தொடர்ந்து எழுதுங்கள் … கவிதைக்கான காத்திருப்புடன் அனந்து …

  2. ”…என்னை வலியவளாக்கிக்

    கொண்டிருந்த நம் காதல் – ஓரிரு

    நொடிகளில் வறியவளாக்கிய அவலம்…”
    இக்கவிதையில் எனக்குப் பிடித்த வரிகள்.
    நல்வாழ்த்து சகோதரி. வலைச்சர மூலம்.
    வேதா. இலங்காதிலகம்.

நுண்மதி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி