கருப்பு அங்கியணிந்த
சிலரிடையே உனக்கான நானும்
எனக்கான நீயும்…
நமக்கான நம் கண்மணிகள்
உன்னோடு ஓரிரு வாரங்களும்
என்னோடு ஓரிரு வாரங்களுமாம்…
நல்லது என்ற தொனியில்
சந்தோஷிக்கும் நம்
நலம் விரும்பிகளும் உறவுகளும்…
என்னை வலியவளாக்கிக்
கொண்டிருந்த நம் காதல் – ஓரிரு
நொடிகளில் வறியவளாக்கிய அவலம்…
என் இதயச் சிதறல்கள்
இன்னமும் உன் பேர் சொல்லியே
துடித்துக் கொண்டிருக்கின்றன…
நம்முடைய காதலும்,
காதல் நிமித்தமும்
ரத்தாகாமல் இருந்திருக்கலாம்…
ஒருவேளை புரிதலும்,
புரிதல் நிமித்தமும்
நமக்குள் வலுப்பட்டிருந்திருந்தால்…!
புரிதலின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும் அழகான கவிதை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் vgk
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி vgk சார்.
அருமை நுண்மதி …! இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என கேட்க வைக்கும் கவிதை … இனிமேல் தொடர்ந்து எழுதுங்கள் … கவிதைக்கான காத்திருப்புடன் அனந்து …
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி அனந்து.
நல்ல கவிதை..! பெண்ணின் பார்வையில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
வாழ்த்துகள்!
நன்றி திரு. அப்துல் காதர்…
”…என்னை வலியவளாக்கிக்
கொண்டிருந்த நம் காதல் – ஓரிரு
நொடிகளில் வறியவளாக்கிய அவலம்…”
இக்கவிதையில் எனக்குப் பிடித்த வரிகள்.
நல்வாழ்த்து சகோதரி. வலைச்சர மூலம்.
வேதா. இலங்காதிலகம்.
எனக்கும் அந்த வரிகள் மிகவும் பிடிக்கும்… நன்றி தோழி…